சென்னையில் அமைகிறது அடிடாஸ் காலனி நிறுவனத்தின் மையம்..

தமிழகத்தில் சென்னையில் அடிடாஸ் (Adidas) காலனி நிறுவனத்தின் மையம் அமையவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் ‘அடிடாஸ்’ காலணி நிறுவன மையம் தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் அமைய உள்ளது. அடிடாஸ் நிறுவனம் சீனாவுக்கு பிறகு முதல் முறையாக தமிழகத்தில் தடம் பதிக்க உள்ளது. வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை (7ஆம் தேதி) உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அடிடாஸ் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

அடிடாஸ் நிறுவனம் தனது global capacity center ஐ சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்ச்சுக்கல், சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மையங்களுடன் இணைந்து இந்த மையம் செயல்பட உள்ளது. சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

அனைவரும் பெரிய அளவில் விரும்பிய அணியக்கூடிய காலணியாக அடிடாஸ் ஷூக்கள் இருக்கின்றன. பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது. அவர்கள் சென்னையில் தொழில் தொடங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.