2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யா – ஜோதிகா இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சிறப்பான வாழ்க்கை மூலம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மூமாதிரியாக திகழ்கின்றனர். இந்நிலையில் உறைபனி பொழியும் ஆர்க்டிக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ள சூர்யா ஜோதிகா தம்பதி, பனியில் ஜாலியாக சுற்றுவது, நாய்கள் வண்டியில் பயணம் மேற்கொள்வது பனியில் விளையாடுவது என்பது போன்ற வீடியோ ஒன்றை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.