தமிழகத்தில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு மற்றும் தாம்பரம் சிறப்புரையில் ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூர் மற்றும் தாம்பரம் இடையே போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தாம்பரம் மற்றும் மங்களூர் விரைவு ரயில் தாம்பரத்திலிருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு மங்களூரை சென்றடையும். அதனைப் போலவே மங்களூர் மற்றும் தாம்பரம் சிறப்புரையில் மங்களூரில் இருந்து டிசம்பர் மூன்றாம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு புறப்படும் எனவும் இந்த சிறப்பு ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.