சிரியா நாட்டின் இடைக்கால அரசின் தற்காலிக பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வடமேற்கில் இருக்கும் கிளர்ச்சி குழுவின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 2025 மார்ச் ஒன்றாம் தேதி வரை முகமது அல் பஷீர் காபந்து பிரதமராக செயல்பட உள்ளார்.

மக்கள் அமைதியை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறியுள்ளார். கிளர்ச்சி குழுக்களின் பல நாள் போரை தொடர்ந்து முன்னாள் பிரதமர் பஷார் அல் அசாத் அந்நாட்டிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கதாகும்.