தாங்கள் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து சமந்தா உட்பட பல நடிகைகள் மனம் திறந்துள்ளனர். அந்த வரிசையில் இணையும் விதமாக நேர்காணல் ஒன்றில் பேசிய அனுஷ்கா “நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 – 30 நிமிடங்களுக்கு சிரிப்பை என்னை கட்டுப்படுத்த முடியாது. இதனால் சிரமத்தை சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது நகைச்சுவையாக சொல்லப்பட்டதென்று ஒரு தரப்பும், உண்மை என்று மற்றொரு தரப்பும் பேசி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை அனுஷ்கா தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக அனுஷ்கா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.