
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திபாகர் நாயக் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு 77 வயதாகிறது. இவர் ஒடிசா மாநில செயலாளராக பல வருடங்கள் பதவி வகித்தவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஆசிரியராகவும் இருந்திருக்கலாம். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.