பீகார் மாநிலத்தின் சிவானில் உள்ள கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் வியாழக்கிழமை பட்டப்பகலில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, நான்கு பேர் கொண்ட கும்பல் பைக்குகளில் கடைக்கு வந்து, துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்துள்ளனர். பணியாளர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்திய அவர்கள், கடையில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர். தப்பிச் செல்லும் போது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கூறப்படுகிறது.
बड़ी खबर: सिवान में दिनदहाड़े सरेआम लूट.
रघुनाथपुर थाना क्षेत्र के ताड़ी बाज़ार में दुकान पर लूट करते अपराधियों द्वारा गोली चलाने का वीडियो सामने आया है, जिससे इलाके में दहशत फैल गई है.
मौके पर एसपी मनोज तिवारी पहुंचे और जांच शुरू कर दी है.#Siwan #Raghunathpur #Loot #Crime… pic.twitter.com/BZFwIwdKbE— Prabhat Khabar (@prabhatkhabar) November 27, 2025
கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாக இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகுநாத்பூர் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள இந்த நகைக் கடையின் அருகே உள்ள மக்களும் சம்பவத்தால் பீதியடைந்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதே மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மகாதேவ் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போது வீட்டு உரிமையாளர்கள் உறவினர் இறப்பு காரணமாக கிராமத்திற்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். அந்த சம்பவத்திலும் சிசிடிவி காட்சிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
