திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் கடந்த 7-ம் தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

இதனால் தினந்தோறும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற 16-ஆம் தேதி சித்திரை தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. மேலும் இதனால் வருகின்ற 16-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.