திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மருது பாண்டி என்பவர் வந்துள்ளார். பாஜக கட்சியின் பிரமுகரான இவர் தாமரை சின்னம் பொறித்த போஸ்டர்களை பேருந்தில் ஒட்டியுள்ளார்.

இதனை சுப்பிரமணியன் தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மருதுபாண்டி சோடா பாட்டிலை எடுத்து வந்து சுப்பிரமணியனின் மண்டையை அடித்து உடைத்துள்ளார். இதில் சுப்பிரமணியனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருது பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.