ஆந்திர மாநிலம் அனங்கப்பள்ளி லங்கேலபாலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலும் உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு லாரி, இருசக்கர வாகனம், கார்கள் போன்ற வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் வந்த லாரி சிக்னலில் நின்று கொண்டிருந்த மற்ற வாகனங்கள் மீது மோதி ஒன்றின் பின் ஒன்றாக மாறி மாறி எல்லா வாகனங்களும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேருக்கு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை‌ மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கஜுவாகாவிலிருந்து அனகப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்ததால் சிக்னலில் நின்றுகொண்டிருந்த மற்ற வாகனங்கள் மீது மோதியது என தெரியவந்தது.

பின்பு ஒரு கனரக லாரி மீது மோதி நின்றதால் அதிகமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 1 ஆட்டோ, 5 இருசக்கர வாகனம் மற்றும் 3 கார்கள் முழுவதுமாக சேதம் அடைந்தது. விபத்தில் பலியானவர்கள் அனங்கப்பள்ளியை சேர்ந்த பச்சிக்குரா காந்தி(52), கொனதல அச்சையா நாயுடு(55) மற்றும் யெரப்பாடு(30).

இந்த சம்பவம் தொடர்பாக லாரியின் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது ஓட்டுநரின் அலட்சியமே விபத்திற்கான காரணம் என்பது தெரியவந்தது. இந்த விபத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.