சாலை விபத்தில் பிரபல நடிகை அருந்ததி நாயர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை சீரியல் நடிகை கோபிகா அனில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் தெரிவித்தார். மருத்துவமனை செலவு அதிகமாக இருப்பதால் அருந்ததியின் சிகிச்சைக்கு உதவுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.