
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிதறிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்து அவரை பின்தொடர்ந்து சென்று கொடுத்துள்ளனர்.
வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்ற பணம் தவறிவிட்டதாக கூறிய முதியவர் பணத்தை எடுத்துக் கொடுத்த உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துவிட்டு மீதியை கொடுங்கள் என்று கூறி அங்கிருந்து அனைவரையும் நெகிழ வைத்தார். இதனால் நெகிழ்ந்த மக்கள் முழு பணத்தையும் கொடுத்து முதியவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் வியப்பை ஏற்படுத்தியது