பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது சாம்பியன் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியா வரவேண்டும் எனவும் ஒருவேளை இந்தியா வராவிட்டில் சாம்பியன் டிராபி தொடரில் இருந்து விலகுவோம் என்றும் சாம்பியன் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்த மாட்டோம் என்றும் ஐசிசியிடம் கூறியதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறது. அதன்படி உலகக்கோப்பையுடன் பாகிஸ்தான் முதலில் இஸ்லாமாபாத் நகரில் சாம்பியன் டிராபி தொடருக்கான ஊர்வலத்தை நடத்த உள்ளது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளான முசாரா பாத், ஸ்கார்டு மற்றும் முர்ரி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ளதாக அறிவித்தனர். இதில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஐசிசி அந்தப் பகுதிகளுக்கு ஊர்வலம் செல்ல அனுமதி மறுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களை கருதி பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுக்கும் நிலையில் தேவையில்லாமல் கிரிக்கெட்டில் அரசியலை பாகிஸ்தான் புகுத்துவதாக ஜெய்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.