
பெங்களூரு மாவட்டம் தேவனஹள்ளி தாலுக்கா சவக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக ரத்னா. இந்த பெண்ணுக்கு 38 வயது ஆகிறது. சம்பவம் நடந்த அன்று நாகரத்னா சாம்பார் வைத்துள்ளார். அப்போது அது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த நாக ரத்னா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நாகரத்னாவின் தாயும் சகோதரரும் நிதி சுமை மற்றும் குடும்ப தகராறு காரணமாக நாகரத்னாவின் கணவரே அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியதாக புகார் அளித்துள்ளனர். நாகரத்னாவின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.