புதுச்சேரி மாநிலம் ஏனாம் அக்ரஹார பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சாய் ரோஹித். இந்த சிறுவன் மதிய உணவை வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மகன் வீட்டிற்கு சாப்பிட வராததால் பெற்றோர் பள்ளிக்கு தேடி சென்று உள்ளனர்.

அங்கு சிறுவனை காணாமல் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் தேடி உள்ளனர். அப்போது பாலயோகி மைதானத்தில் அமைந்துள்ள அமைந்திருந்த நீச்சல் குளத்தில் சிறுவன் சாய் ரோஹித் கிடந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் சாய் ரோஹித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.