கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் மனு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரம்மா (28) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் அவருடைய மனைவியிடம் சாப்பாடு வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவருடைய மனைவி நீண்ட நேரமாக செல்போனில் மூழ்கினார். கணவருக்கு சாப்பாடு வைக்காமல் செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததோடு நீங்களே சாப்பாடு வைத்து சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் மனுவுக்கு கோபம் ஏற்பட்டது. இதில் மனு கோபம் அடைந்த நிலையில் தன் மனைவியை கழுத்தை நெறித்தார். இதில் அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். பின்னர் மனு தன் மனைவியின் பெற்றோருக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை கூறினார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைமாக இருந்த மனுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.