உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் என்பவரின் வீட்டில் சாத் பூஜா கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சூடான பாயாசம் பாத்திரத்திற்குள் 5 வயது சிறுமி காவியா தவறுதலாக விழுந்துள்ளார்.

இதில் உடல் முழுவதிலும் தீக்காயம் ஏற்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.