சென்ற ஆண்டு சவாலான வேடங்களில் நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2022ம் வருடத்தில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் “சர்தார்” போன்ற 3 திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து, தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை என் படங்களில் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அதே சமயத்தில் என்னுள் உள்ள கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் குறிப்பாக வந்தியதேவன், சர்தார் போன்ற தனித்துவமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 2023 மற்றும் பல வருடங்களுக்கு என் தீவிர ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தரமான படங்களுடன் தொடர்ந்து மகிழ்விப்பேன் என நான் உறுதியளிக்கிறேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.