100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட படும் என்று நம்பி பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுக்களை பரிசோதிப்பதில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் மளிகை கடை மற்றும் உணவகங்களில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் வேகமாக பரவி வருவதால் மக்கள் நோட்டுக்களை கவனமாக வாங்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.