தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் பாஜகவின் மாநில துணை தலைவரும், வடசென்னை பாஜக வேட்பாளருமான வழக்கறிஞர் பால் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.