நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி டைரக்டில் நடிக்க இருக்கிறார். தாமிரபரணி மற்றும் பூஜை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இப்போது அமைந்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. அண்மையில் தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் வெளிவந்தது. தற்போது இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷால் ரூ.14 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். எனினும் பாண்டியராஜ் உருவாக்கும் புது படத்தில் நடிக்க நடிகர் விஷால் ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.

முதலில் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்று கூறிய சூழலில், 3 மாதங்கள் இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்பின் இறுதியாக ரூ. 19 கோடி சம்பளமாக தர தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதற்கு நடிகர் விஷாலும் ஒப்புக்கொண்டு உள்ளார். பாண்டியராஜ் இயக்கும் திரைப்படத்திற்கு ரூ. 19 கோடி சம்பளம், ஆனால் ஹரி இயக்கும் படத்திற்கு மட்டும் ரூ. 14 கோடி சம்பளம் வாங்குகிறாரா விஷால் என கேள்வி எழுந்திருக்கிறது. ஆகவே பாரபட்சம் பார்த்து தான் விஷால் இப்படி செய்கிறாரா என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.