தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு இந்த ரயில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மறுமார்க்கமாக பன்வெல் முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை நவம்பர் 29ஆம் தேதி முதல் வரும் அனைத்து புதன்கிழமைகளிலும் டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17 ஆகிய தேதிகளில் பன்வெல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது