விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சதுரகிரி மலைக் கோவிலில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது ஜூலை நான்காம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி ஆனி மாத சனி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சனிக்கிழமை வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். இதனைத் தொடர்ந்து பத்து வயது உட்பட்டவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.