சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது தை பிறந்திருப்பதாலும் வியாழன் பிரதோஷமும் சனிக்கிழமை அமாவாசையும் வருவதாலும் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.