பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம், வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணி சுமை அதிகரிக்கிறது.

இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது. நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன்வைத்த நிலையில் அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்த உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.