இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த நான்காவது டி20 போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் சிவம் துபே அடித்த ஒரு ராட்சத சிக்ஸ் மைதானத்தை விட்டே வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அனுப்பிய ஒரு முக்கிய மெசேஜை ரின்கு சிங் மூலம் பெற்றுக் கொண்ட சிவம் துபே, அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) November 6, 2025
“>
ஆஸ்திரேலியாவின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா வீசிய பந்தைச் சந்தித்த துபே, க்ரீஸை விட்டு இறங்கி வந்து தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, பந்தை லாங்-ஆன் திசையில் மைதானத்திற்கு வெளியே அனுப்பிவிட்டார். இந்த இமாலய அடி காரணமாக, நடுவர்கள் புதிய பந்தை கொண்டு வர வேண்டியிருந்தது. சிவம் துபேவின் இந்த அதிரடி, சுழற்பந்துக்கு எதிராக அவர் கொண்டிருக்கும் அஞ்சாத அணுகுமுறையையும், வலிமையையும் நிரூபித்தது.
Clean swing. Towering six. Pure power and fearless intent, Dube style! ⚡#AUSvIND 👉 4th T20I | LIVE NOW pic.twitter.com/ynfVyMMM6w
— Star Sports (@StarSportsIndia) November 6, 2025
“>
