தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சுவாதி. அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து போராளி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவை ஓரம் கட்டினார்.

பின்னர் சிறிது காலம் கழித்து தமிழ் சினிமாவிற்கு வராமல் தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுவாதி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கோவில் தரிசனம் செல்வதற்காக ரயிலில் புர்கா அணிந்து சுவாதி சென்றுள்ளார். அதனை அப்படியே வீடியோவாக எடுத்து அவர் வெளியிட்டுள்ள நிலையில் இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Swathi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@swati194)