கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் ‘லுலு மால்’ கட்டப்போவதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாகப் பலரும் வதந்தி பரப்புகின்றனர்.

அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து வீட்டுவசதித்துறைச் செயலாளர் தசமயமூர்த்தி, “மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.