தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பறவையைப் போல் பாசமாக மோடி நம்மை பார்க்க வருகிறார். ஆனால் மோடியை வேடந்தாங்கல் பறவை என்று கூறுவதில் எங்களுக்கு பெருமையே என்று மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.

ஆனால் அவர் பெருச்சாளி போல கோபாலபுரத்தில் பொந்தியில் ஒளிந்திருக்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக சீசனுக்கு வரும் வேடந்தாங்கல் பறவையை போல மோடி அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்திருந்த நிலையில் தற்போது அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளார்.