அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் பொன்னேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் ஆறு பேர் பயணித்துள்ளனர்.

அந்த காரை சோதனை செய்த போது இரும்பு ராடுகள், பெரிய கத்திகள், கயிறுகள் போன்றவை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆறு பேரும் பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரில் வந்த பிரபாகரன், விக்னேஷ், விஜய், ஹரிஷ், பிரபு, வீரா ஆனந்தபுரம் மாதவன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.