உலகத்தையே ஆட்டி படைத்த கொரோனா ஒருமுறை வந்துவிட்டால், நுரையீரலில் தங்கிவிட வாய்ப்புள்ளதாக, பிரஞ்ச் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி போன்ற சில வைரஸ்கள் நோய் தொற்றை ஏற்படுத்தி குணமான பின்பும், கண்டறியமுடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும்.

அதேபோல், கொரோனா வைரஸ்கள் நுரையீரலின் மேற்பரப்பில் தங்கிவிட வாய்ப்புள்ளது என பிரென்ச் பொது ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 மாதங்கள் வரை இது நுரையீரலில் தங்கியிருக்கும், பரிசோதனையில் கூட தெரியாது என தெரியவந்துள்ளது.