கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் மலைப்பகுதிகளில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.