புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள் புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் கைவிடப்பட்டது. இதனிடையில் செல்வமணி என்பவர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.