தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தாதா பீர். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று பீர் வழக்கம் போல வேலைக்கு சென்ற பின்பு அவரது மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது இவர்களது மூன்று வயது மகன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தார். அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விளையாட்டுத்தனமாக அறையின் கதவை உள் பக்கமாக பூட்டியுள்ளார். பின்பு கதவை திறக்க முடியாமல் சிறுவன் கதறி அழுதுள்ளார். சிறுவனது அழுகுரல் கேட்ட அவரது தாய் சென்று பார்த்தபோது சிறுவன் கதவை உள் பக்கமாக பூட்டி இருந்தது தெரியவந்தது.

எனவே இவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்பக்கமாக பூட்டிய அறையை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர்களால் திறக்க முடியாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அறையின் கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.