தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அரியலூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழக மக்கள் என் மீதும் திமுகவின் மீதும் வைத்துள்ள அன்பை பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கலக்கம் ஏற்படுகிறது.

அது கொஞ்சமாக இல்லை நிறையவே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுக அரசுக்கு எதிராக அவர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். பொய்க்கு மேக்கப் போடுவதால் அது உண்மையாகி விடாது. மேலும் திமுக அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதால் பொதுமக்கள் எங்கு சென்றாலும் எனக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று கூறினார்.