தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள “மெரி கிறிஸ்துமஸ்” படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் பல்வேறு படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். அத்துடன் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி -சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் “விடுதலை” படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு 1000 புத்தகங்களை வழங்கியிருக்கிறார். இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத்தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளரான வசந்த கண்ணன் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.