தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமியுடன்  அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தேமுதிக கட்சியினுடைய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேலும் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே சுதீஷ் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

முதல்முறையாக தேமுதிக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி  மரியாதை செலுத்தினார். கே.பி முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். அதிமுக கூட்டணியில் தேமுதிக  இடம் பெற்றுள்ள நிலை நேற்றைய தினம் 5 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்றைய தினம் திருவள்ளுர், கடலூர், விருதுநகர், மத்திய சென்னை, தஞ்சை ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தேமுதிக வெளியிட உள்ளது.

இதற்கிடையே மரியாதை நிமித்தமாக  தேமுதிக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ள நிலையில் அங்கு இருக்கக்கூடிய விஜயகாந்தின் நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி.