இங்கிலாந்தின் பர்மிங்காமில் வசித்து வருபவர் ரோஸ் டாய்ல் (73). மெட்ரோ இணையதளத்தின் அறிக்கையின்படி, மூதாட்டியான ரோஸ், ஓமேஜ் என்ற தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார். அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த நிறுவனம் ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தியது.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கல்லில் ரோஸ் ஒரு லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ. 31 கோடி) வென்றார். பரிசாக, அவருக்கு கார்ன்வாலில் ஐந்து படுக்கையறைகள் கொண்ட ஒரு ஆடம்பர வீடும் வழங்கப்பட்டது.