தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற்றது. அதன் பிறகு மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுகிறது. அதன்படி டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்களுக்கு விடுமுறை. மேலும் இதைத் தொடர்ந்து ஜனவரி இரண்டாம் தேதி வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.