தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சனி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வர இருக்கிறது. பொங்கல் தினம் திங்கட்கிழமையான ஜனவரி 15ஆம் தேதி வருகின்றது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல் விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சனி ஞாயிறு விடுமுறையும் வருவதால் மொத்த ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. எனவே பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் முன்னரே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.