உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ். பட்டியலின வகுப்பை சார்ந்த இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். இதனை பார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது நண்பர்கள் கமலேஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலேஷ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.