பொதுவாகவே ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றில் கலப்படமும் உள்ளது. இவை ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயத்தை போன்றது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஸ்கிரீமில் பிடோமைன் மற்றும் டைரோடாக்ஸிகான் போன்ற ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படலாம் என்று உணவு தர நிர்ணய அமைப்புகள் கூறுகின்றன. ஐஸ்கிரீம்கள் கெட்டியாக மற்றும் இனிப்பாக இருப்பதற்கு கார்ன் சிரப், பிரக்டோஸ் கார்ன் சிரப் , குளுகோஸ் சிரப் ஆகியவை கலக்கப்படுகிறது.

ஐஸ்கிரீம் கொழுப்பாகவும் முறையாகவும் இருக்க சோப்பு அல்லது சலவை பவுடர் கலக்கப்படலாம். இதனை கண்டறிவதற்கு சிறிது எலுமிச்சை சாறு எடுத்து ஐஸ்கிரீமில் சேர்த்தால் ஐஸ்கிரீமில் குழிகள் மற்றும் முறை ஏற்படும். இதனை வைத்து கலப்படம் என தெரிந்து கொள்ளலாம். ஐஸ்கிரீம் அளவை அதிகரிப்பதற்காக கிரீம் அமைப்பை கொடுக்க தாவர எண்ணெய் மற்றும் டால்டா ஆகியவை சேர்க்கலாம். ஐஸ்கிரீம் நீண்ட நேரம் உருகாமல் இருப்பதற்கும் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் ஆரோக்கியமற்ற கம் போன்ற பொருட்களை ஐஸ்கிரீமில் சேர்க்கலாம்.

ஐஸ்கிரீம் கலப்படம் கண்டறிய FSSAI பரிந்துரைத்துள்ள செயல்முறை:

ஒரு ஸ்பூன் ஐஸ் கிரீம் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணீர் சேர்க்கவும்.

அடுத்து மூன்று முதல் நான்கு சொட்டு ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்கவும்.

இப்போது ஐஸ்கிரீம் நிறம் மாறத் தொடங்கும்.

அது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் கலப்படம் என்பதை அறிந்து கொள்ளலாம்.