இந்தியாவில் சமீப ஆண்டுகளில் தெருநாய் தாக்குதல்கள் அதிகரித்து, பொதுமக்களின் கவலையாக மாறியுள்ளன. பெரும்பாலான தெருநாய்கள் பாதிப்பில்லாதவையாக இருந்தாலும், சில ஆக்ரோஷமான நாய்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறை சம்பவங்களுக்கு காரணமாகின்றன.

இதனால், பொது பாதுகாப்பு மற்றும் தெருநாய் மேலாண்மை குறித்து விவாதங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோ, நிஜ வாழ்க்கை ‘சூப்பர் டாக்’ என அழைக்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீரத்தைக் காட்டுகிறது.

வைரல் வீடியோவில், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒரு பால்கனியில் அமர்ந்து கீழே உள்ள தெருவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திடீரென சில குழந்தைகள் சாலையில் ஓடுவதைக் கண்டு நாய் விழிப்புடன் செயல்படுகிறது. உடனடியாக பால்கனியில் இருந்து குதித்து, தெருவில் இருந்த ஒரு தெருநாயை நோக்கி பாய்கிறது. குழந்தைகள் அங்கிருந்து ஓடிச் செல்லும் நிலையில், ஜெர்மன் ஷெப்பர்ட் தலையிட்டு, அவர்களை பாதுகாக்கும் விதமாக நடந்துகொள்கிறது.

“>

 

‘கர் கே காலேஷ்’ என்ற கணக்கால் X (முன்னர் ட்விட்டர்) இல் பகிரப்பட்ட இந்த காட்சி, ரிஷிகேஷின் குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவானதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சில இணையவாசிகள், ஜெர்மன் ஷெப்பர்டின் நடவடிக்கை மீட்பு முயற்சியை விட ‘பிராந்திய உள்ளுணர்வு’ காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். சம்பவத்தின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், வீடியோ ஆன்லைனில் வேகமாக பரவி, பெரும் பார்வையாளர்களை கவர்ந்து, தெருநாய் தாக்குதல்கள், செல்லப்பிராணி நடத்தை, பொது பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது.