தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.