குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடுவது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான, அந்த தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற இந்த குரூப் 1 தேர்வை பொருத்தவரை சுமார் 2 லட்சம் பேர்  எழுதி தற்போது தேர்வு முடிவுக்காக காத்துள்ளனர்.

முதல் நிலை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால் தான் அதன் பிறகு நடைபெறக்கூடிய, அந்த மெயின் தேர்வுக்கான தகுதி பட்டியல், தேர்வு நடைபெறக்கூடிய தேதி போன்ற விவரங்கள் தெரியவரும். ஏற்கனவே இந்த பிப்ரவரி மாதத்தில் இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சியால் மார்ச் மாதம் என மாற்றப்பட்டுள்ளது..

நேற்றைய தினம் குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியான நிலையில் தற்போது குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகளும் மார்ச் மாதத்தில் தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.