தமிழகத்தில் நாளை(மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.