பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ்  இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.