மும்பை பகுதியில் எப்போதும் குறுகலான சாலைகள், நவீன உணவகங்கள் மற்றும் நீண்ட வரிசைகளுக்குப் பெயர் பெற்றது. குறிப்பாக இங்குள்ள ‘பென்னே’ (Benne) என்ற தோசைக்கடைக்கு பெங்களூரு சுவை கொண்ட தோசைகளை உண்ண மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம்.

சமீபத்தில் இந்த நீண்ட வரிசையைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “ஒரு சாதாரண தோசைக்காக வெயிலில் இவ்வளவு நேரம் நிற்பதா?” என நகைச்சுவையாகக் கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம், வெயிலில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அக்குடை மற்றும் தண்ணீர் வழங்கும் அக்காடையின் மனிதாபிமானத்தையும் அவர் பாராட்டத் தவறவில்லை.
<a href="http://

“>
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, “உண்மையை உரக்கச் சொன்ன ஆட்டோ மாமா” எனப் பாராட்டி வருகின்றனர். நடிகை கரிஷ்மா தன்னா உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவைப் பார்த்துச் சிரித்துத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். மும்பையில் தங்களுக்குப் பிடித்த பெங்களூரு பாணி தோசைகள் கிடைக்கவில்லை என்பதால், அகில் மற்றும் ஸ்ரேயா தம்பதியினர் இந்த உணவகத்தைத் தொடங்கினர். விளம்பர மோகத்திற்கும் உண்மையான சுவைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது பாணியில் விளக்கியது அனைவரையும் கவர்ந்துள்ளது