தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் தற்போது youtube சேனல்களில் சினிமா குறித்தும் பல நடிகர்கள் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் வடிவேலு குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் வடிவேலு குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் பறிபோவதற்கு காரணம் அவருடைய செயல்தான். அவரோடு நான்கு படங்கள் நடித்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார்.

திரையில் நீங்கள் பார்க்கும் வடிவேலுவிற்கும் செட்டில் இருக்கும் வடிவேலுக்கும் வித்தியாசம் உள்ளது. இவர் நடிக்கும் படத்தில் உதவியாளர் மேக்கப் டச்அப், கார் மற்றும் டிரைவர் என அனைவருக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடம் பத்தாயிரம் ரூபாய் மொத்தமாக வாங்கிக் கொள்வார். ஆனால் கொடுப்பது என்னவோ 100, 200 என்று பிரித்துக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஆட்டைய போட்டு அந்த பணத்தை குடித்தே காலி செய்து விடுவார் என்று கூறியுள்ளார்.