புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில் மக்கள் இவ்வாறு கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.